2 45
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித், அனுரவிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள சவால்

Share

சஜித், அனுரவிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள சவால்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எவரினாலும் மாற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்ய முடியும் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதம் செய்யுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த விவாதத்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை நிபந்தனைகளில் திருத்தம் செய்தால் நாடு மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...