20 21
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இந்த பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் காணப்படும் ஆபத்துக்கள் குறித்து கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வேட்பாளருக்கும் அநீதி இழைக்கப்படத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...