கோட்டா கூட்டமைப்பு நாளை நேரடிப் பேச்சு
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – கூட்டமைப்பு நேரடிப் பேச்சு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளன.

அத்துடன், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்தது. எனினும், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய போராட்டத்தால் நாளை வரை இந்தப் பேச்சு பிற்போடப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...

06 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல்...

05 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை: சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவுப் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று...