tamilnaadi 53 scaled
இலங்கைசெய்திகள்

சாந்தனை அழைத்து வர நடவடிக்கை: ஜனாதிபதி உறுதி

Share

சாந்தனை அழைத்து வர நடவடிக்கை: ஜனாதிபதி உறுதி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இன்றையதினம் (03.02.2024) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே சி. சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வருகைக்காக அவருடைய தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருப்பதோடு தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் இன்றையதினம் (03.02.2024) ஜனாதிபதியை சந்தித்து சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து பேசினோம்.

இந்நிலையில், ஜனாதிபதி தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக கூறியுள்ளதோடு சாந்தனின் தாயாரிடமிருந்து ஒரு கடிதமும், எங்களுடைய தரப்பிலிருந்து ஒரு வேண்டுகோள் கடிதமும் வழங்குமாறு கோரியுள்ளார்.

நாங்கள் நாளையதினம் அந்த கடிதங்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ஜனாதிபதியிடம் வழங்குவோம்.

சாந்தனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயல் வடிவில் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு நாளை வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 09, 2026)...

world 39
செய்திகள்உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% அபராத வரி: உலக நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும்...

world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு விளையாட்டுகள்: சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியீடு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் போது...

world 37
செய்திகள்உலகம்

ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” (Effective regime change) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...