ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், “இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது இந்திய பயணத்தின் போது அழைப்பதில் பெருமை அடைகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது பயணத்தின் போது, ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு, நமது அண்டை நாடுகளின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இந்தியாவின் அண்டை நாடு முதல் மற்றும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை உள்ளதாகவும்கூறியுள்ளார்.

Exit mobile version