24 664fe5561ced1
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியலமைப்பை திருத்தும் திட்டம் ஜனாதிபதியிடம் இல்லை

Share

அரசியலமைப்பை திருத்தும் திட்டம் ஜனாதிபதியிடம் இல்லை

தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது பொதுத் தேர்தலை நடாத்தவோ, அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகளினால் பங்குச் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக வாராந்த அமைச்சரவை மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெறும் என ஜனாதிபதி தெளிவாக கூறியதாகவும், அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினர்

ஜூன் 15ஆம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஊகங்கள் வெளியாகி உள்ளதா என வினவியபோது, ​​அந்த ஊகங்களில் எந்த அடிப்படையும் இல்லை எனவும், அவ்வாறான விடயம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை எனவும் பந்துல தெரிவித்தார்.

இது சிலரின் கனவு மட்டுமே என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...