ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்

Share

ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் நிமால் லான்சா ஆகியோரின் தலைமையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தான் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிய முடிகின்றது.

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவர் அந்த வீட்டுக்குப் பொறுப்பாக நிறுத்தப்பட்டு அவர்களின் ஊடாகப் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு வலை வீசுதல் உட்பட பல வேலைத்திட்டங்கள் இந்த வீட்டில் இருந்து தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அறிய முடிகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...