Sarath Fonseka
அரசியல்இலங்கைசெய்திகள்

பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி அழைப்பு!!

Share

இடைக்கால அரசில் அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

இதன்படி சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் பொன்சேகா இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

பொன்சேகாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்.

இதன்படி தெற்கு அரசியலில் இன்றைய தினம் முக்கிய சில அரசியல் முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

போரின்போது ஒன்றிணைந்து செயற்பட்ட பொன்சேகாவும், கோட்டாவும் 2010 இல் பிரிந்தனர். இந்நிலையில் மீண்டும் சங்கமிக்க முற்படுகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...