Sarath Fonseka
அரசியல்இலங்கைசெய்திகள்

பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி அழைப்பு!!

Share

இடைக்கால அரசில் அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

இதன்படி சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் பொன்சேகா இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

பொன்சேகாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்.

இதன்படி தெற்கு அரசியலில் இன்றைய தினம் முக்கிய சில அரசியல் முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

போரின்போது ஒன்றிணைந்து செயற்பட்ட பொன்சேகாவும், கோட்டாவும் 2010 இல் பிரிந்தனர். இந்நிலையில் மீண்டும் சங்கமிக்க முற்படுகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...