ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த கையோடு இக்கூட்டம் இடம்பெறும் என தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment