1 18
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

Share

உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு விழாவில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் செயற்படுகிறது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஆணையை பெற்றுள்ளது. முதல் நாளில் 152 மன்றங்களிலும், மீதமுள்ள 115 மன்றங்களிலும் விரைவில் அதிகாரத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

உள்ளுராட்சி சபைகளில் எதிர்க்கட்சிக்கு ஆட்சி செய்யும் ஆணை இல்லை எனவும், சில கட்சிகள் ஒரு மன்றத்தில் ஒரு அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணைக்கு எதிராக உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...