8 49
இலங்கைசெய்திகள்

வடக்கிற்கு வீதியால் பயணிக்கும் அநுர: உலங்குவானூர்தியை பயன்படுத்த வலியுறுத்து!

Share

வடக்கிற்கு வீதியால் பயணிக்கும் அநுர: உலங்குவானூர்தியை பயன்படுத்த வலியுறுத்து!

வடக்கிற்கு வீதிகள் வழியாக பயணம் செய்யும் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் செலவிடக்கூடிய மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.

இன்றைய (24.2.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara Dissanayake) உலங்குவானூர்திகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலங்குவானூர்திகளின் மூலம் பயணம் செய்தால் ஜனாதிபதி முக்கியமான முடிவுகளை எடுக்க அதிக நேரம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தனது இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், இதனை மூடிவைத்திருப்பதன் மூலம் நாடு என்ன நன்மையை அனுபவிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...