20
இலங்கைசெய்திகள்

சபையில் எதிர்க்கட்சிகளுக்கு அநுர தரப்பு வழங்கிய சாட்டையடி!

Share

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் எதிர்க்கட்சிகள் கூறி வந்த விமர்சனங்களுக்கு அரசாங்கம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

இதன்படி, கடந்த 05 மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார மேற்கொண்ட 03 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபா எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான விமான பயணச்சீட்டுகளை சீன அரசாங்கம் வழங்கியதாகவும், இந்தப் பயணத்திற்காக ஜனாதிபதி செயலகம் 386,000 ரூபா மட்டுமே செலவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி அநுரவிற்கு விஜயம் செய்ததற்காக வழங்கப்படும் கொடுப்பனவாக 2,055 அமெரிக்க டொலர்கள் கிடைத்ததாகவும், அவை எந்த செலவும் இல்லாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய விஜயத்தின் போது விமான பயணச் சீட்டுக்காக 3.12 லட்சம் ரூபா மற்றும் இராஜதந்திர நினைவுப் பொருட்களுக்காக ஒதுக்கப்ட்ட பணம் உட்பட 12.20 லட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுரவின் துபாய் விஜயத்தின் போது, விமான பயணச் சீட்டு அந்நாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும், கொடுப்பனவாக கிடைத்த 960 அமெரிக்க டொலர்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவும் வெளியிடப்பட்டதுடன், அதன் போது தற்போதைய ஜனாதிபதி அநுரவின் செலவுத் தொகையும் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, அநுரவின் செலவாக வெளியிடப்பட்ட தொகை மிகவும் சிறிய தொகை என்பதால், குறித்த விடயம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருந்ததுடன், பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

இவ்வாறானாதொரு பின்னணியில், அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...