20
இலங்கைசெய்திகள்

சபையில் எதிர்க்கட்சிகளுக்கு அநுர தரப்பு வழங்கிய சாட்டையடி!

Share

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் எதிர்க்கட்சிகள் கூறி வந்த விமர்சனங்களுக்கு அரசாங்கம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

இதன்படி, கடந்த 05 மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார மேற்கொண்ட 03 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபா எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான விமான பயணச்சீட்டுகளை சீன அரசாங்கம் வழங்கியதாகவும், இந்தப் பயணத்திற்காக ஜனாதிபதி செயலகம் 386,000 ரூபா மட்டுமே செலவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி அநுரவிற்கு விஜயம் செய்ததற்காக வழங்கப்படும் கொடுப்பனவாக 2,055 அமெரிக்க டொலர்கள் கிடைத்ததாகவும், அவை எந்த செலவும் இல்லாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய விஜயத்தின் போது விமான பயணச் சீட்டுக்காக 3.12 லட்சம் ரூபா மற்றும் இராஜதந்திர நினைவுப் பொருட்களுக்காக ஒதுக்கப்ட்ட பணம் உட்பட 12.20 லட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுரவின் துபாய் விஜயத்தின் போது, விமான பயணச் சீட்டு அந்நாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும், கொடுப்பனவாக கிடைத்த 960 அமெரிக்க டொலர்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவும் வெளியிடப்பட்டதுடன், அதன் போது தற்போதைய ஜனாதிபதி அநுரவின் செலவுத் தொகையும் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, அநுரவின் செலவாக வெளியிடப்பட்ட தொகை மிகவும் சிறிய தொகை என்பதால், குறித்த விடயம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருந்ததுடன், பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

இவ்வாறானாதொரு பின்னணியில், அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...