Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

Share

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக நிராகரித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான இலக்குகளையும் பின்பற்றி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், முந்தைய அரசாங்கங்களின் கீழ் திறைசேரி கணக்கு நீண்டகாலமாக மேலதிக பற்று (Overdraft) நிலையிலேயே காணப்பட்டதாக ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு 180 பில்லியன் ரூபாவும், 2019ஆம் ஆண்டு 244 பில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டு 575 பில்லியன் ரூபாவும், 2021ஆம் ஆண்டு 821 பில்லியன் ரூபாவும் மேலதிக பற்று காணப்பட்டதாக இவர் தெரிவித்தார்.

ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் 2025 நவம்பர் மாத அளவில், திறைசேரி கணக்கானது 1,202 பில்லியன் ரூபா நேர்மறையான மிகுதியைக் காட்டியுள்ளது.

இது முன்னைய நிலமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 ட்ரில்லியன் ரூபா முன்னேற்றமாகும் என அவர் தெரிவித்தார்.

அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்காக முன்வைக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டிற்கு, அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

MediaFile 15
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு IMF-இன் அவசரகால நிதியுதவி: $206 மில்லியன் நிதிக்கு நிறைவேற்று சபை ஒப்புதல்!

இலங்கைக்கு அவசரகால நிதி உதவியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை (Executive...