Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

Share

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக நிராகரித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான இலக்குகளையும் பின்பற்றி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், முந்தைய அரசாங்கங்களின் கீழ் திறைசேரி கணக்கு நீண்டகாலமாக மேலதிக பற்று (Overdraft) நிலையிலேயே காணப்பட்டதாக ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு 180 பில்லியன் ரூபாவும், 2019ஆம் ஆண்டு 244 பில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டு 575 பில்லியன் ரூபாவும், 2021ஆம் ஆண்டு 821 பில்லியன் ரூபாவும் மேலதிக பற்று காணப்பட்டதாக இவர் தெரிவித்தார்.

ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் 2025 நவம்பர் மாத அளவில், திறைசேரி கணக்கானது 1,202 பில்லியன் ரூபா நேர்மறையான மிகுதியைக் காட்டியுள்ளது.

இது முன்னைய நிலமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 ட்ரில்லியன் ரூபா முன்னேற்றமாகும் என அவர் தெரிவித்தார்.

அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்காக முன்வைக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டிற்கு, அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...