கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிப் பெண்களை அரச சேவையில் ஈடுபட அழைக்காத காரணத்தால் தற்போது அவர்களை அரச சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
சில வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களை மீண்டும் சேவையில் இணைக்க உள்ளோம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைப்பது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில நிறுவனங்களை நடத்தில் செல்வதில் ஏற்படும் சிக்கல்களை கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனஅரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment