Thavisalar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தவிசாளரை சிறைப்பிடித்த வலிமேற்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள்!!

Share

தவிசாளரை போராட்டத்திற்கு செல்ல விடாமல் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிறைப்பிடித்த சம்பவம் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.

வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்றையதினம் சபையின் உப தவிசாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான கோரிக்கையை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பொன்ராசா முன்வைத்தார்.

இந்த கோரிக்கை சபையில் முன்மொழிந்து வழிமொழிந்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஈ.பி.டி.பி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தவிர ஏனைய அனைவரும் சபையை விட்டு வெளியேறி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகினர்.

இதன்போது சபையை விட்டு வெளியேறாத ஏனைய உறுப்பினர்கள் உப தவிசாளரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல விடாமல் வற்புறுத்தி பலவந்தமாக மறித்து “போனவர்கள் போகட்டும் நீங்கள் சபையை நடத்துங்கள்” எனக்கூறினர்.

இதனால் செய்வதறியாது திணறிய அவர் சபையினை 14 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டு, உப தவிசாளரும் சபையில் இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் சபையை ஆரம்பிக்குமாறு உறுப்பினர்கள் கூறினர். ஆனால் தவிசாளரோ சபையை 14 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் உறுப்பினர்கள் கொந்தளித்து “பெரும்பான்மையாக இருக்கும் எங்களை கேட்காமல், 5 உறுப்பினர்களின் பேச்சைக்கேட்டு எப்படி சபையை ஒத்திவைப்பீர்கள்? நாங்கள் என்ன வீட்டிற்கா சென்றோம்,

ஆர்ப்பாட்டத்திற்கு தானே சென்றோம். இன்று 6 மணியாகினாலும் சபையை நடாத்தவேண்டும்” எனக்கூறி ஒரு மணத்தியாலத்திற்கும் அதிகமான நேரம் அவருடன் முரண்பட்டனர்.

பின்னர் அனைத்து உறுப்பினர்களும் ஒருவாறு சமாதானமாகி சபையிலிருந்து வெளியேறினர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...