image 516387d0e4
இலங்கைசெய்திகள்

மின் கட்டண உயர்வு – சட்ட நடவடிக்கைக்கு இறங்குகிறார் ஜனக

Share

தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை குறித்து எதிர்வரும் இரண்டு நாட்களில்  தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தனது அலுவலகத்துக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

30 முதல் 90 வரையிலான மின்சார அலகுகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட 5 மில்லியன் மக்களுக்காக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணமானது 250 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தி நீதிமன்றத்துக்கு செல்வதாக தலைவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக பல நாட்களாக வெளிநாட்டுக்கு சென்ற தாம் நாடு திரும்பிய போதும் தனது அலுவலகம் தனக்காக திறக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவர் அலுவலகத்துக்கு வருகை தந்த போது, அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட வில்லை என்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு பின்னர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...