image 516387d0e4
இலங்கைசெய்திகள்

மின் கட்டண உயர்வு – சட்ட நடவடிக்கைக்கு இறங்குகிறார் ஜனக

Share

தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை குறித்து எதிர்வரும் இரண்டு நாட்களில்  தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தனது அலுவலகத்துக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

30 முதல் 90 வரையிலான மின்சார அலகுகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட 5 மில்லியன் மக்களுக்காக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணமானது 250 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தி நீதிமன்றத்துக்கு செல்வதாக தலைவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக பல நாட்களாக வெளிநாட்டுக்கு சென்ற தாம் நாடு திரும்பிய போதும் தனது அலுவலகம் தனக்காக திறக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவர் அலுவலகத்துக்கு வருகை தந்த போது, அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட வில்லை என்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு பின்னர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...