Untitled
இலங்கைசெய்திகள்

மீண்டும் கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வு!!

Share

மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் விலையை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறினார்.

“இந்த மாதம் முதல் நீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கோழிப்பண்ணைத் தொழில் நீர் மற்றும் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த அதிகரிப்புடன், வற் வரி 12% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது. புதிய பாதுகாப்பு வரி 2.5% விதிக்கப்பட்டுள்ளது. இது இறுதி உற்பத்திக்கு சுமார் 7.5% அதிகரிக்கலாம்.

அனைத்து சூழ்நிலைகளிலும், உற்பத்திச் செலவைப் பொறுத்து கோழி இறைச்சியின் விலை உயரும் வாய்ப்புள்ளது. இது குறித்து அமைச்சரிடம் திங்கட்கிழமை விவாதிப்போம். குறிப்பாக முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் இருந்து விடுபடுவது எப்படி என கலந்துரையாடுவோம்.

தற்போது 50% உற்பத்தியாளர்கள் முட்டையின் கட்டுப்பாட்டு விலையால் இத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். முட்டையிடும் விலங்குகள் கூட இறைச்சிக்காக சந்தைப்படுத்தப்படுகின்றன என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...