tamilni 86 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பலமான ஒருவரை வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்

Share

ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (04.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் கட்சியை கட்டியெழுப்பக்கூடிய, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முகம்கொடுக்கும் பலம் கொண்ட ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நியமிக்கும்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தருணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனைய கட்சி வெற்றி பெறும் என நினைத்து தேர்தலை ஒத்திவைத்தால் அரசியல் செய்ய முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். அனைத்து முக்கிய தேர்தல்களும் இந்த ஆண்டு நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் ஒரே ஒரு தேர்தலுக்கு மட்டுமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணம் இல்லை என கூறுபவர்களிடம் நாடாளுமன்றம் நடத்த பணம் உள்ளதா என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

நாட்டை அபிவிருத்தி செய்த அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...