அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளைய கண்டனப் பேரணி ஒத்திவைப்பு!

ஆ.லீலாதேவி
Share

“நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டும், அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது கண்டனப் பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது. புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.”

– இவ்வாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், நீதி கிடைக்க வேண்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கிச் செல்லும் கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனாலும், நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டும், எமது அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும். சிரமத்துக்கு மன்னிக்கவும். தங்கள் ஒத்துழைப்பு தொடர வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...