SSRI LANKA
இலங்கைசெய்திகள்

தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே!

Share

தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே!

நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசு பிரகடனப்படுத்திய நிலையில்  வாரத்தில் 6 நாள்கள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக அதனை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்படுகின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுக்கு அமைய வாரத்தில் திங்கள், செவ்வாய் , வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் தபால் அலுவலகங்கள் திறக்கும் எனவும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அலுவலகங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...