election
அரசியல்இலங்கைசெய்திகள்

தபால் மூல வாக்கு அட்டை விநியோகம் இன்று ஆரம்பம்!

Share

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கு அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாகவும், இன்றுமுதல் முதலே அவற்றை விநியோகிக்க உள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்தது.

மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 19ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இம்முறை 6 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு அவற்றில் 36 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் 28ஆம் திகதி வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, சுமார் 02 இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1558586293 jaffna university 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை முறையற்றுப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: பதிவாளர் வி. காண்டீபன் கடும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை (Logo) அனுமதி இன்றி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அவ்வாறு...

Development officers protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப்...

cbsn fusion trump says killing in iran is stopping thumbnail
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஈரான் – அமெரிக்கா மோதலைத் தவிர்க்க துருக்கி மற்றும் அரபு நாடுகள் தீவிர முயற்சி!

மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே...

25 678c45533b657
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் போதுமானதாக இல்லை: 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க IG பிரியந்த வீரசூரிய திட்டம்!

காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய சம்பளம், அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு போதுமானதாக இல்லை...