செய்திகள்இலங்கை

நாட்டில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!!!

Share
cb
Share

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அந்நிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் 623 வகையான பொருள்களுக்கு குறித்த உத்தரவாத தொகை இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள்.

பானங்கள், பழங்கள், அழகுசாதனப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், பியர், வைன் ஆகியவை.

சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகள்.

ஆகியவை உள்ளிட்ட பொருள்களுக்கு இந்த உத்தரவாத தொகை பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால், மேற்படி பொருள்களுக்கான இறக்குமதி நடவடிக்கையில் மிகப்பெரும் தாக்கம் ஏற்பட இடமுண்டு. இதன் காரணமாக குறித்த பொருள்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ce

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...