நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, நாளைமறுதினம் வரை தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ள நிலையில், நாட்டின் அதிகமான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியம், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
#SriLankaNews