4 41
இலங்கைசெய்திகள்

வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! சஜித் பிரேமதாச

Share

வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! சஜித் பிரேமதாச

நாட்டின் அனைத்து வறிய குடும்பங்களுக்கும் மாதாந்தம் சுமார் இருபதாயிரம் ரூபா வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சேருவாவில பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சனசவிய, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சமூக நலன்புரித் திட்டங்களின் நல்ல பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய திட்டம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் இருபத்து நான்கு மாதங்களில் வறுமையை ஒழிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...