images 15
இலங்கைசெய்திகள்

இலங்கையின் குடிவரவு சட்டத்தின் மோசமான நடைமுறை

Share

இலங்கையின் குடிவரவு சட்டத்தின் மோசமான நடைமுறை காரணமாக, இஸ்ரேல், இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர், இலங்கைக்கு வந்து, தொழில் நடவடிக்கைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இலங்கை சுற்றுலா அதிகாரிகள் இப்போது 40 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, நாட்டிற்குள் இலவச விசா நுழைவை நீடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது, சுற்றுலாத் துறையில், அந்நியச் செலாவணி வருமானத்தை எதிர்காலத்தில் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

அத்துடன், இலங்கை மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் எதிர்பார்க்கிறது. இதற்கு மத்தியில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள அருகம்குடாவில் இதுபோன்ற வணிக மையங்களை இஸ்ரேலிய நாட்டினர் நடத்துகின்றனர்

இது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இடமாக மாறியுள்ளது. இஸ்ரேலியர்களால் நடத்தப்படும் வணிக மையங்களில், இஸ்ரேலிய நாட்டினரின் நலனுக்காக எபிரேய மொழியில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

யூத சமூக மையமான ஒரு சபாத் ஹவுஸும் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டபோது, அத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதில் சுற்றுலா அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதில், குடிவரவு அதிகாரிகள் விசா வழங்குவதிலும் அவற்றைச் சரிபார்ப்பதிலும் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...