தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இன்று (நவம் 21) நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சியினர் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புப் பாரிய அளவில் உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:
“இந்த அரசாங்கம் வந்த நாட்களிலிருந்து முடிந்த வரை வரிகளை விதித்து, மக்களைத் துன்பப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. ஆனால் மக்கள் இப்பிரச்சினையைத் தீர்க்க பணம் இல்லை எனக் கூறுகிறார்கள். இது என்ன பொய்?. இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்துவிட்டது. நாட்டில் பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. இது நாட்டின் பல வளர்ச்சித் திட்டங்களைப் பாதித்துள்ளது.”
“இந்த அரசாங்கம் முடிந்தவரை பொய்களைக் கூறி எதிர்க்கட்சிகளை அடக்க முயற்சிக்கிறது. இப்போது அவர்கள் காவல்துறையுடன் இணைந்து எதிர்க்கட்சியை அடக்க முயற்சிப்பது நன்றாகத் தெரிகிறது.”
இறுதியில், சட்டத்தின் ஆட்சியைப் பற்றிப் பேசுகையில், அவர் எதிர்கால அரசாங்கம் குறித்து எச்சரிக்கை விடுத்தார்:
“ஆனால் எதிர்காலத்தில், எங்கள் அரசாங்கத்தின் கீழ் அவர்களுக்கு (அதிகாரிகளுக்கு) அனைவருக்கும் தேவையான சட்டம் செயல்படுத்தப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.