அரசியல்இலங்கைசெய்திகள்

இனி அத்தியவசிய தேவைகளுக்கே எரிபொருள் வழங்கப்படும்!!

Share

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருகிறது.

இதன்படி மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தினசரி இழப்பு ரூ.100 கோடிக்கு மேல் என்றும் அவர் கூறினார். எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இல்லையெனில் இந்த மாதத்தில் ஏற்படும் நஷ்டம் அதிகரித்து, நிறுவனம் கடும் நிதிச் சரிவை சந்திக்க நேரிடும் என்றார்.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளது.

ஒரு லிட்டர் பெற்றோல் ரூ.177க்கு விற்பனை செய்வதால், அதை ரூ.192 ஆக உயர்த்த வேண்டும் எனவும் ஒரு லிற்றர் டீசல் 121 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால், அதை 169 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், வரலாற்றில் பெற்றோல், டீசல் விலை அதிகம் விற்பனையாகும் விலையாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...