MediaFile 4 4
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!

Share

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு இவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துர மதூஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

அந்தத் துப்பாக்கி எவ்வாறு மதூஷின் கைக்குச் சென்றது அல்லது அது எப்போது காணாமல் போனது என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில் முறையான விளக்கம் அளிக்கத் தவறியமையால் இவர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

72 மணிநேரத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சி.ஐ.டி அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் இருந்த ஏனைய அரச துப்பாக்கிகள் குறித்தும் சி.ஐ.டி தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...