pg01 Treasury.jpg 1 0000
அரசியல்இலங்கைசெய்திகள்

48 மணிநேரம் இலங்கை இருளில்? – தீர்மானம் நாளை

Share

நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்கள் நாடு இருளில் இருக்க நேரிடும் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழில் சங்க நடவடிக்கையில் மட்டும் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

நாளை 3ஆம் திகதி நாங்கள் மாபெரும் போராட்டத்துக்கு தயாராகி உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வர்.

இதற்கான அவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில் மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய எவரும் இருக்கமாட்டார்கள்.

இந்தப் போராட்டம் கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தக்கு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிடும் போது அரசு நிச்சயம் அதற்கு செவிசாய்க்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகத்தை நிறுத்தவதன் மூலம் பொதுமக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்க நாம் விரும்பவில்லை.

எவ்வாறெனினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாதுவிடின் மின் விநியோக நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...