17 3
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்:ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Share

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்:ரணிலுக்கு பெருகும் ஆதரவு

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துக்கொள்ள உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒவ்வொரு நாளும் மாவட்ட மட்டத்திலும் உள்ளுராட்சி மட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் திரண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழுவும் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...