rtjy 349 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சிக்குள் களையெடுப்பை ஆரம்பித்த பசில்

Share

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், தற்போது சுயேச்சையாகச் செயற்படும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இருபுறமும் கால்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பஸிலிடம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 11
செய்திகள்இந்தியா

20 இலட்சம் புத்தகங்களின் சேகரிப்பாளர்: பத்மஸ்ரீ அன்கே கவுடாவின் அரிய சாதனை!

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா (Anke...

26 698472524cf78
செய்திகள்உலகம்

பிரான்ஸில் சீன உளவாளிகள் கைது: Airbnb வீட்டின் தோட்டத்தில் செயற்கைக்கோள் கருவி மூலம் ரகசியத் தகவல் சேகரிப்பு!

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள்...

trump wh af1 feb 6 1770433049681 hpMain
செய்திகள்உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் அமெரிக்காவில் கூடுதல் வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

ஈரானிய அரசாங்கத்தின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட...

26019077 tn13
செய்திகள்இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு பலம்: 3,000 கி.மீ தூரம் பாயும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியா தனது அணு ஆயுத பலத்தை நிரூபிக்கும் வகையில், தரை விட்டு தரை பாயும் அக்னி-3...