தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடி ஆராய்வு!

Share

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்றுக் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் முற்பகல் 11 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய அரசியல் குழு சந்திப்பு மாலை 4 மணி வரை நீடித்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், பொன். செல்வராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ். குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் குழு உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அரசியல் குழுவில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் இருவரும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். எனினும், சாணக்கியன் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

கட்சியின் மத்திய குழுவை விரைந்து கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

#SriLankaNews

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...