WhatsApp Image 2022 04 29 at 3.50.04 PM
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவில் உடையில் வீடியோ எடுத்த பொலிஸார்! – தாறுமாறாக கேள்வி கேட்ட சாணக்கியன்

Share

நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் நினைவுதினத்தை முன்னிட்டு இன்றையதினம் மட்டக்களப்பில் நினைவுதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டதுடன், கவனவீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொலிஸாரிடம் மிக காரசாரமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் வீடியோ எடுத்த நிலையில், பொலிஸார் என்றால் சீருடையில் வரவும் என தெரிவித்த சாணக்கியன், எஞ்சியுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்ய முயற்சிக்கிறீர்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில், நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...