WhatsApp Image 2022 04 29 at 3.50.04 PM
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவில் உடையில் வீடியோ எடுத்த பொலிஸார்! – தாறுமாறாக கேள்வி கேட்ட சாணக்கியன்

Share

நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் நினைவுதினத்தை முன்னிட்டு இன்றையதினம் மட்டக்களப்பில் நினைவுதினம் அனுஷ்ட்டிக்கப்பட்டதுடன், கவனவீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொலிஸாரிடம் மிக காரசாரமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் வீடியோ எடுத்த நிலையில், பொலிஸார் என்றால் சீருடையில் வரவும் என தெரிவித்த சாணக்கியன், எஞ்சியுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்ய முயற்சிக்கிறீர்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில், நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...