இலங்கைசெய்திகள்

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

3 55
Share

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

ஜனவரி 2 ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜேசன் முகமது என்ற சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுவனின் தயார் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் 121/05A, மஃபூர் கிரசண்ட், களுத்துறை தெற்கு என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜேசன் முகமது, சுமார் 5 அடி உயரம் மற்றும் மெலிந்த உடல், நீண்ட முகம், சுருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடி கொண்டவர் என காவல்துறை அடையாளங்களை வெளியிட்டுள்ளதுடன், காணாமல் போன போது அவர் வெள்ளை சட்டை மற்றும் கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோரை  களுத்துறை தெற்கு காவல் நிலையம் 071-8591691 மற்றும் களுத்துறை காவல்துறை தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...