திலீபன் 1 scaled
இலங்கைசெய்திகள்

திலீபன் நினைவுத்தூபியில் பொலிஸ் குவிப்பு!

Share

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்துக்கு அமைய நீதிமன்ற உத்தரவின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்தில் இருந்து பணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய யாழ்.தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவஞ்சலி நிகழ்வு கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...