குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
இலங்கைசெய்திகள்

குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Share

குளியலறையில் இருந்த பெண்ணை கைத்தொலைபேசியில் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அம்பாறையில் வீட்டொன்றிற்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்ந பெண் ஒருவரை கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பொலிஸ் உத்தியோகதத்தர் கைது செய்யப்பட்டள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டு காவலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அருகில் உள்ள வீட்டு வளாகத்துக்குள் இரகசியமாக பிரவேசித்து அந்த வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துக்கொடிருந்த போது பிடிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அம்பாறை பொலிஸார் வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...