17
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் நடவடிக்கை

Share

குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் நடவடிக்கை

முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புற்றுநோய் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சுகவீன கொடுப்பனவு சுமார் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உதவித் தொகையை 5,000 ரூபாவாக உயர்த்தி திருத்தப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய, வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் அநீதிக்கு உள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....