298936627 6337765132917696 3110247735570698635 n
இலங்கைசெய்திகள்

நடுவானில் விமானிகள் தூக்கம்! -பாதுகாப்பாக விமானம் தரையிறக்கம்

Share

சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் Boeing 737-800 (reg ET-AOB) விமானத்தின் இரு விமானிகளும் நடுவானில் தூங்கிய நிலையில் தன்னியக்க பைலட் (autopilot ) துண்டிக்கப்பட்ட பிறகு, விமானம் அதன் இலக்கை தாண்டிச் சென்றதால், Alarm ஒலித்த நிலையில் திடீரென விளித்து அவர்கள் 25 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

விமானிகள் தூங்கியபோது, ​​தன்னியக்க பைலட்டில் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததது பின்னர் Alarm ஒலித்த பின்னர் அடிஸ் அபாபா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்புகளை மேற்கொண்டபோதும் முடியவில்லை. எனினும் பின்னர் வட்டமடித்து 25 நிமிடங்களின் பின்னர் அடிஸ்அபாபா விமான நிலையத்தின் ஓடுபாதை 25L இல் விமானத்தை தரையிறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் பகிரங்கமாக கருத்து இன்று தெரிவிக்காவிட்டாலும், விமானியின் சோர்வு குறித்த கவலையை விமானம் எழுப்பியுள்ளது.

விமானப் பகுப்பாய்வாளர் அலெக்ஸ் மச்செராஸ் இதை “ஆழ்ந்த கவலைப்படுவதாக விவரித்தார், விமானியின் சோர்வு சர்வதேச அளவில் “விமானப் பாதுகாப்பிற்கான மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகத் தொடர்கிறது.

இவ்வாறான நிலையில் இன்று (19) பிற்பகல் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட விமானிகளுக்கும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் “விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் பொருத்தமான திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று விமான நிறுவனம் கூறியது, பாதுகாப்பு அவர்களின் முதல் முன்னுரிமையாக தொடரும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...