2 1
இலங்கைசெய்திகள்

கம்பன்பிலவை கண்டு அச்சமடைந்த பிள்ளையான்!

Share

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலையில் வைத்து அழுததாக கூறப்பட்டமையானது, உதய கம்பன்பில அவரது சட்டத்தரணி ஆகியதனால் வெளிவந்த அச்சத்திலேயே என ஜேவிபி- யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சாடியுள்ளார்.

பேருவளையில் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். ஒருவேளை அது கடைசி வழக்காகவும் இருக்கலாம்.

பிள்ளையானை அழைத்து வந்தபோது என்ன நடந்தது? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொலைபேசியிலிருந்து அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் தொலைபேசியைக் கொடுக்குமாறு சிறைஅதிகாரியிடம் கேட்டுள்ளார்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே பிள்ளையைச் சந்திக்க முடியும். இவர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்ல.

அப்படியானால் அடுத்த வாயப்பு முறை என்ன, சட்டத்தரணி என்ற அடிப்படையே?

கம்பன்பில ஒரு சட்டத்தரணி என்றாலும், நாமல் ராஜபக்சவைப் போல அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் வாதிட்டதில்லை.

யாரோ ஒருவர் நகைச்சுவையாக பேஸ்புக் பக்கத்தில் இடுகையிடப்பட்டிருப்பதைக் கண்டேன்.

பிள்ளையான் ஏன் அழுதார்? அதாவது பிள்ளையானின் சட்டத்தரணி உதய கம்மன்பில என்பதை அறிந்தவுடனேயே அவர் அழுதார். வழக்கு தோற்கடிக்கப்படும் என்ற பயத்திலேயே அவர் அழுதார் என அந்த பதிவாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...