செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் தொலைபேசி திருட்டு! – வாழைச்சேனையில் மூவர் கைது

Screenshot 20220101 193113 Chrome
Share

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அண்மையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைக்கு தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 6 தொலைபேசியிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதி – சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகள் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட மூவரும் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...