88
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர், மொடோர்னா

Share

உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் ஏற்றப்படமாட்டாது.

நாராஹேன்பிட்டி மருத்துவமனையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என வெளியாகிய தகவலை அடுத்து அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டனர்.

எனினும் உள்நாட்டு மாணவர்களுக்கு செலுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டபோது அங்கு மாணவர்கள் அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...