இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!

Share
pi
Share

சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!

நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றமையைத் தொடர்ந்து நாட்டில் 15–19 வயதுக்கிடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறு ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வயதெல்லையில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவமனைகளில் மாத்திரம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12–19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குமாறு விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...