24 6618a49c4fc9a
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலுள்ள நபரினால் இலக்கு வைக்கப்படும் கொழும்பு கோடீஸ்வரர்

Share

வெளிநாட்டிலுள்ள நபரினால் இலக்கு வைக்கப்படும் கொழும்பு கோடீஸ்வரர்

கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெல பகுதியில் இன்று அதிகாலை உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் கடுவெல அதுருகிரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அது வெடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டின் முன் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த செயலை செய்த வெளிநாட்டில் இருக்கும் கைவரு முத்துவா என்பவரின் வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொரத்தோட்ட கைவரு முத்துவா என்பவருக்கு பல வர்த்தகர்கள் கப்பம் கட்ட மறுத்ததால், ஆட்களை பயன்படுத்தி இவ்வாறு அச்சுறுத்தி வருவதாக நவகமுவ பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...