குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதன் அடிப்படையிலான உண்மைகளை மறைத்ததாலும் வழக்கை முன்னெடுப்பதை சவால் செய்யும் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தீர்மானங்களினால் நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கீர்த்தி தென்னகோன் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் கீழ், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை செலுத்த நடவடிக்கை எடுத்ததில் இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கப்ரால் தான் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு, 10.4 முதல் 10.6 பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
குற்றவியல் நம்பிக்கை மீறலுக்காக தண்டனைச் சட்டத்தின் 388ஆவது பிரிவின் கீழ் கப்ரால் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கு முன்னாள் ஆளுநரும் பொறுப்பு எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
Leave a comment