ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்ராலுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Share
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, வியாழக்கிழமை (06) உத்தரவு பிறப்பித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸினால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதன் அடிப்படையிலான உண்மைகளை மறைத்ததாலும் வழக்கை முன்னெடுப்பதை சவால் செய்யும் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தீர்மானங்களினால் நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கீர்த்தி தென்னகோன் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் கீழ், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை செலுத்த நடவடிக்கை எடுத்ததில் இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கப்ரால் தான் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு, 10.4 முதல் 10.6 பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

குற்றவியல் நம்பிக்கை மீறலுக்காக தண்டனைச் சட்டத்தின் 388ஆவது பிரிவின் கீழ் கப்ரால் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கு முன்னாள் ஆளுநரும் பொறுப்பு எனவும்  குற்றம் சுமத்தியிருந்தார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....