மின்சார கார்கள் இறக்குமதிக்கு அனுமதி

மின்சார கார்கள்

நாட்டின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதத்தில் மின்சார கார்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது தனியார் துறை பல்வேறு இடங்களில் சுமார் 400 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில்சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் 350 அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version