24 6657d462f030d
இலங்கைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

Share

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வருவதாயின் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் அவசியம் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், வெளிவிவகார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கின் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...