24 6657d462f030d
இலங்கைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

Share

ரஷ்ய இராணுவத்தில் இணைய பல கோடி ரூபாய் மோசடி

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு வருவதாயின் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் அவசியம் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், வெளிவிவகார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கின் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...