அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சியிலிருந்து விலகுகின்றனர் பெரமுனவினர்!

Share
Sri Lanka Podujana Peramuna slpp 1
Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுமார் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து சுயாதீனமாகி புதிய கட்சியாக செயற்படத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட சில அமைச்சரவை அமைச்சர்களும் இவ்வாறு சுயாதினமாக செயற்படவுள்ளதுடன், ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த குழு பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக செயற்பட்டாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, அரசாங்கத்தில் இணைந்து கொண்ட டயானா கமகே மற்றும் அரவிந்த குமார் போன்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...