பொகவந்தலாவையிலும் மக்கள் போராட்டம் வெடித்தது!

தொடர் விலையேற்றம், மின்வெட்டு மற்றும் எரிவாயு, எரிபொருளுக்கான தட்டுப்பாட்டு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின் நகரில் இன்று (4) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் டின்சின் மற்றும் அப்பகுதியில் உள்ள சில தோட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Photo 5

#SriLankaNews

Exit mobile version